Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம், டிச. 23– ஊராட்சி செயலாளர்கள் மையக் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு நிதி திரட்ட மாநிலதலைவர் மல்லசமுத்திரம் வருகை தந்தார்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் மாநில மையக் கட்டடம் கட்டுமான பணிகள் திருச்சியில் நடந்து வருகின்றது. இப்பணிகளுக்கு நிதிதிரட்ட அச்சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
ஒன்றிய நிர்வாகிகள் சார்பில், பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில பொருளார் மகேஸ்வரன், ஒன்றிய நிர்வாகிகள், செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.